விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் உயர் நிலை அதிகாரி ஒருவர் பலி

 

திருகோணமலை மாவட்டம் மல்லிகைத்தீவு பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மல்லிகைத்தீவு பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று சனிக்கிழமை இரவு 7:30 நிமிடமளவில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏனையோர் தப்பியோடி விட்டனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனா்.


முகப்பு


ஈழம் 2008 அகவி