மட்டு நகர் குண்டு வெடிப்வில் 2 காவல்துறை பலி! காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம்

21.01.2009

மட்டக்களப்பு தலைமை காவல்துறை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற குண்டு வெடிப்வில் 2 காவல்துறை பலி! காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம்

இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் மட்டு தலைமையலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடை ஒன்றிக்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குண்டு வெடிப்பில் 2 காவல்துறையின் பலி  காவல்துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியையும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு வெடித்த இடத்தில் மேலதிகமாக காவல்துறை, இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்படுவதாகவும் நகர் பகுதிக்கான போக்குவரத்து தடைப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முகப்பு


ஈழம் 2008 அகவி